படத்திற்கு கவிதை

கவிஞர் இரா.இரவி



டிய ஆட்டம் அடங்கியது
எழ நினைத்தாலும் இயலாது
புழுக்கள் ருசி பார்க்கும்
தடுக்க முடியாது !
-----------
யாராக இருந்தாலும்
ஆறடியே அளவு
எரித்தால் அதுவுமில்லை !
---------
மிக நீண்ட தூக்கம்
மீள வழியில்லை
அசைவற்ற அடக்கம் !
----------
அடங்காதவர்களையும்
அடக்குமிடம்
அமைதியிடம் !
---------
டெல்லிக்கு இராசானாலும்
சமாதிக்குப் பிணம்தான்
மண்ணிற்கு இரைதான்
---------
மீண்டு எழுவது சாத்தியமில்லை
முடிந்தால் முடிந்ததுதான்
இருக்கையில் பயன்பட வாழ் !
--------
நண்பர்கள் அழுதாலும்
உறவுகள் கதறினாலும்
மாண்டவர் திரும்புவதில்லை
--------------
புத்தனுக்கு ஞானம் போதி மரத்தடியில்
பித்தனுக்கு ஞானம் சமாதிக்கடியில்
நல்லவனுக்கு ஞானம் வாழ்கையில் !
------------
தேக்கு மரத்தில் சவப்பெட்டி செய்தாலும்
தேகத்தை புழுக்கள் உண்பதை
தடுக்கவே முடியாது !
---------
நிரந்தரமற்ற வாழ்க்கையில்
நிரந்தரமானது அன்பு மட்டுமே
நாளும் அன்பு செய் !
இறந்த பின்னும் வாழலாம் !