வாழ்ந்திடுக பல்லாண்டு !

எம்.ஜெயராமசர்மா - மெல்பேண் - அவுஸ்திரேலியா

(27 ஜூன் 1927அகவை எண்பத்தொன்பதில் காலடி எடுத்துவைக்கும் மல்லிகை ஆசியர் டொமினிக் ஜீவா அவர்களை வாழ்த்திப்பாடிய வாழ்த்து)

ல்லிகையின் நாயகனே மனவுறுதி கொண்டவனே
நல்லதமிழ் இலக்கியத்தை நாளுமே வளர்த்தவனே
சொல்லவொணா துயரமெலாம் தோழிலே சுமந்தவனே
வல்லவனே ஜீவாவே வாழ்வுனக்குச் சிறந்திடட்டும் !

எளிமையாய் வாழ்ந்தாலும் இலக்கியத்தை நேசித்தாய்
பழுதில்லா இலக்கியத்தை பரப்புதற்குத் துணையானாய்
எழுதிநிற்பார் அனைவரையும் ஏந்திநின்றாய் மல்லிகையில்
இப்போதும் அவரெழுத்தில் மல்லிகையே மணக்கிறது !

பட்டம்நீ பெறாவிடினும் படித்தாரால் போற்றப்பட்டாய்
பட்டம்பெற்ற பலபேரும் மல்லிகையை நாடவைத்தாய்
கஷ்டமதில் இருந்தாலும் கருத்துடனே எழுதிநின்றாய்
நஷ்டமவந்த போதினிலும் நடத்திநின்றாய் மல்லிகையை !

தண்ணீரைப் பொருளாக்கி தகைவுடை பரிசுபெற்றாய்
கண்ணீரைத் துடைத்தபடி கதையெழுதி கலைவளர்த்தாய்
உன்னரிய முயற்சினால் உயர்த்திநின்றாய் மல்லிகையை
இன்றளவும் மணக்கிறது இலக்கியமாய் மல்லிகையும் !

நீநடந்து தமிழ்வளர்த்தாய் நெடிதுநாள் வாழ்ந்திடுக
நின்னுடைய தமிழ்ப்பணியை நெஞ்சார வாழ்த்துகிறேன்
வாழ்நாளில் நீபடைத்த சாதனையால் வாழுகிறாய்
மல்லிகையின் பிதாமகனே வாழ்ந்திடுக பல்லாண்டு !