ஹைக்க   

கவிஞர இரா.இரவி

ன்று மணமாலை
ஒன்று மலர்வளையம்
ஒரே செடி பூக்கள் !

வானத்தின் நிறமென
வஞ்சியின் மனம்
மாறியபடி !

ஒவ்வொரு நேரமும்
ஒவ்வொரு வண்ணம்
ரசியுங்கள் வானம் !

வகுப்பு வேறுபாட்டை
உணர்த்துகின்றன தொடரியின்
கழிவறைகள் !

மழை நின்றபின்
குடை விரித்து
காளான் !

பயன்படவில்லை
மழைக்குக் குடை
காளான் !

ஒன்று மணமாலை
ஒன்று மலர்வளையம்
ஒரே செடி பூக்கள் !

தள்ளிப் போன
தேர்தலால் தள்ளிப் போனது
தோல்வி பயம் !

வருத்தத்தில்
வாக்காளன்
தள்ளிப் போன தேர்தல் !

உலக வங்கியில் இந்தியா
உள்ளூர் வங்கியில் குடிமகன்
கடன் !

ஆசைப்படுகின்றது
போருக்கு
காந்தி தேசம் !

நினைவிற்கு வந்தது
மதில் மேல் பூனை
நடுவணரசு  !

 

eraeravik@gmail.com