ஹைக்கூ கவிதைகள்
 

கவிஞர். தக்ஷன், தஞ்சை


யார் வரைந்தது வானில்
தலைகீழாய் பாரதி மீசை
ஓ! சிறகு விரித்த பறவை!
_________________

என்று திருமணம்
அதற்குள் சீதனமாய்...
முதிர்கன்னி தலையில் நரை!
_________________

வெட்டப்பட்ட மரம்
விட்டுச் செல்கிறது
வடுக்களை மட்டும்!
__________________

மூங்கில் வெட்டியை
துளைத்தெடுக்கிறது
புல்லாங்குழல் இசை!
__________________

கூலி உயர்வுக்கு கடிதம்
தட்டச்சு செய்தவனிடம்
பேரம்!
__________________

என்ன நடந்ததோ இரவு
அதிகாலையிலேயே குளியல்
பனியில் நனைந்த ரோஜா!
 



dhakshanhaiku@gmail.com