மீண்டும் நீ பிறந்து வா...! (கண்ணதாசன நினைவு தின கவிதை)

.
கண்ணன்சேகர



லைமகள் அருளே  மாகவி திரளே !
       மறையாப் புகழே மணக்கும் தமிழே !

கலையாக்
கதிரே கவிதைச் சுடரே !
       கனியின் சுவையே கற்றோர் அவையே !

குலையாக்
குன்றே குறையாக் குதிரே!
      கூர்மைக் கவியே நேர்மை வழியே !

தலைமைக்
தகையே தனித்துவ வகையே!
       தத்துவ விளக்கே  திசையில் கிழக்கே !

வனவாச படைப்பே வாழ்வியல் படிப்பே!
         வற்றா வெள்ளமே வளமிகு உள்ளமே!

மனதின்
மகிழ்வே மறையா முகிழ்வே!
         மயக்கும் அமுதே வியக்கும் தமிழே !

தணலின்
ஒளியே தழைக்கும் மழையே!
         தமிழன் தலைப்பே தத்துவ வியப்பே !

குணத்தில்
குன்றே கோகுலம் கன்றே!
         கோப்பெரும் கவியே கொண்டாடும் புவியே!

காவியத் தலைவா கவிதை முதல்வா !|
         கற்பனை விதையே களிப்புறு நகையே !

மேவிய
நிலையே மேன்மைக் கலையே
         மேடைப் பேச்சே மிகாத வீச்சே!

காவிரி
அலையே கற்பனை மலையே
        கண்ண தாசா  கவியின்
ரோசா
பூவிரிப்
போல புறப்பட்டு வருக !
        பூமியில் பிறந்து புதுக்கவி தருக!

 

kannansekarp@gmail.com