அண்ணல் காந்தி

கவிஞர் புகாரி
 



ண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும்
பிறவிகள் உண்டாமே!

உனக்கொரு
பிறவியில்லையா

தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல்
போய்விட்டன

கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும்
பிறவிகளெடுத்து விட்டனர்

உனக்கு மட்டும்
பிறவியே இல்லையா

அண்ணலே
இன்று
என்னுடைய மனுவையும்
கேள்

நீ
பிறவி எடுக்காதே

கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயாணத்தில்
நீ ஜெனித்ததுமே
உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த்
துளைக்க
துப்பாக்கிகள்
துடித்துக் கொண்டிருக்கின்றன

என்ன
இதற்கும் புன்னகைதானா?
 






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்