உனதே உனது

கவிஞர் புகாரி


ந்த விரல்கள்
உன் சந்தோச தீபங்களை
ஏற்றி வைக்கின்றனவோ
அதே விரல்களே
உன் சோக ஊற்றுகளையும்
தீண்டித்
திறந்துவிட்டு நிற்கும்

சந்தோசமோ சோகமோ
எதுவாயினும்
அதன் காரணியை
வெளி விரல்களில் இருந்து
கைப்பற்று
உன் சொந்த விரல்களுக்கு
இடம்மாற்று

மறுகணம்
நீ வாழும் வாழ்க்கை
உனது

உன்
இன்ப துன்பங்கள்
உனதே உனது
 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்