கோவலர்வாய் வைத்த குழல்

கவிஞர் அனலை.ஆ.இராசேந்திரம்



கூந்தல் கருமேகம் கண்கள் மதன்அம்பு
மாந்தளிர்போல் மேனி மலர்முகத்தாள் - ஏந்திழை
கோவைத் திருவாயிற் கொஞ்சும் எழிற்றமிழோ
கோவலர்வாய் வைத்த குழல்

கன்னி விழியழகிற் கட்டுண்டேன் பொன்போலும்
கன்னக் குழியழகில் மூழ்கிற்றேன் - மன்னுதமிழ்ப்
பாவலர் பாடுபொரு ளானஅவள் வாய்மொழியோ
கோவலர்வாய் வைத்த குழல்





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்