எது கவிதை?

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா

ள்ளத்திற் காணு முணர்ச்சிகள் - தேன்
      ஊற்னெப் பொங்கி வழிகையில் -அதை
அள்ளி யெடுத்தோர் வடிவிலே – கூடும்
      ஆழ்ந்த பொருளினை யேற்றியே - ஓசை
துள்ளி விழும்தமிழ்ச் சொற்களால் - நயம்
      தோய்த்து வெளிப்பட வைத்திடிற் - காட்டு
வெள்ளம் கரைபுரண் டோடல்போல் - புது
      வீறுடன் தோன்றும் கவிதையே!

சித்தத்தி லுண்மை யொளிதரும் - நல்ல
      சிந்தனை யோங்க வழிதரும் - தெய்வ
பக்தி நிலையை வளர்த்திடும் - மாந்தர்
      பண்பொ டொழுகப் பயிற்றிடும் - வீர
வித்தினை ஊன்றி விதைத்திடும் - தோற்று
      வீழி லெழுந்திட வைத்திடும் - இன்னு
மெத்தனை விந்தைகள் உள்ளதோ – செய்யு
      மத்தனை யுன்நற் கவிதையே!

ஆண்டா னடிமை நிலையினைப் - பெண்
      ஆணென்ற பேத விதிகளைக் – கால்
பூண்ட அடிமை விலங்கினைக் - கையிற்
      போட்ட பழமைத் தழைகளை – வழி
தாண்ட முடியாத் தடைகளைக் - குலத்
      தாழ்வினைப் போற்றும் கொடுமையை – யெலாம்
கூண்டோ டுடைத்திடும் வல்லமை – என்றும்
      கொள்ளும் புரட்சிக் கவிதையே!


உலக கவிதை தினம் மார்ச் 21



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்