கல்வி -  அன்றும் இன்றும்

ச.சந்திரா

ஒற்றை துண்டுடன்
     ஒழுக்கமே முதலாய்
கைகட்டி கண்ணியமாய்
     குருகுலம் -அன்று!
அன்னியர் தலையீட்டால்
     அனைத்தும்ஆங்கிலமயமாய்
தொழில் நுட்ப அறிமுகத்தால் இன்று
     கற்பவை எல்லாம்
கணினி மயம்
     நாகரீக குறுக்கீட்டால்
கேட்டரிங் க்ளோனிங் டிசைனிங்
என பட்டியல் நீண்டாலும்
இன்றைய போட்டி உலகில்
கல்வி -மூளையை அடகுவைத்து
முதுகுக்கு பின்னால்
விலை பேசும்
தரகு வியாபாரமாய் இன்று!

 

neraimathi@rocketmail.com