நீ நின்று கொன்ற இதயம்

வித்யாசாகர

ன்பே..
உலகம் தொட்டிடாத
வார்த்தையொன்று -
தொண்டை குழி உடைத்து
உனக்காய் கவிதை புனைய தவிக்கிறது;

தயம் உடைக்கும்
பார்வையேந்தி -
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு
கடவுள் கூட - கர்வியென பெயர் சூட்டலாம்;

துடிக்கும் உயிர் நாதமெல்லாம்
நீயே நீயே உயிர் கொண்டிருக்க
எதை கொண்டு என் காதலை நான்
தொல்வியென்பேன் சொல்லடி;

நீ காதலிக்கிறாயென
உன் இமைகள் சிமிட்டி -
உன் இதயம் சொன்ன - ஆயிரம் பொழுதுகளை கடந்து
எப்படி ஒப்புமென் சிறு இதயம்
நான் மட்டும் காதலிப்பதாய்;

வேண்டுமெனில், இப்படி சொல்லலாம்..

நான் காதலிக்கிறேன்
உன்னிடம் சொல்லிவிட்டு,
நீயும் காதலிக்கிறாய் -
என்னை மட்டும் கொன்று விட்டு!

இந்த கொலைக்கு பெயரும்
கொலையென்று ஆகாமால்
ஒருதலை காதலென்பதே விசித்திரம்!



vidhyasagar1976@gmail.com