மூன்று வயதில்

கவிஞர் புகாரி

மூன்று வயதில்
என்னை
என் தாயிடமிருந்து
பிரித்தார்கள

பள்ளிக்கு அனுப்பி
வைத்தார்கள்

அ எழுது என்றார்கள்
அ எழுதினேன்

ஆ எழுது என்றார்கள்
ஆ எழுதினேன்

இ எழுது என்றார்கள்
நான் அழுதுவிட்டேன்

முக்காடு
போட்டுக்கொண்டு
சிரித்த முகத்துடன்
இருக்கும்
என் அம்மாவைப் பார்த்தால்
’இ’ என்ற
உயிரெழுத்து போலவே
இருக்கும்



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்