ஹைக்கூ கவிதைக

கவிஞர்.இரா.இரவி

விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி

மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ

கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினியில் வைரஸ்

மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்...

பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்

வானத்திலும் வறுமை
கிழிசல்கள்
நட்சத்திரங்கள்

கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே

வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்

வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்

வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்

உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு

கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு

விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்

உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்

எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்

கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?




eraeravik@gmail.com