சவலை

காயத்ரி மகாதேவன்
 
மாதம் ஒரு முறையேனும்
வெளிநாடு பறந்திருக்க
இரவு வெளிச்சத்தில் இருள்
நோக்கி ஆடை களைத்திருக்க
பல திடல்களில் வான் நோக்கி
சிக்சர்கள் மிதந்திருக்க
அப்பாவிகளை வியர்வையில் நனைத்து
பின்னிருந்து தோலை சுரண்டிருக்க
ஏன் அவன் மட்டும்
சோற்றுப்பருக்கையைத் தேடி
குப்பைதொட்டிக்கு அலைகின்றான்?
 

vishnukumarrm@gmail.com