உயிர் மெய்

தங்கம்

அதனின் சுவை அதற்கு
அதிர்சியளிப்பதாக இருந்தது
அதன் பிடியிலிருந்து
நழுவும் எண்ணம்
ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது
எப்பொழுதும்

தொடர முடியாத
உறவின் சலிப்பிலிருந்து...
வெளியேறின மொழியால்
அவரவர்களுக்கான உன்னதங்களை
படைத்துக் கொண்டன; அவைகள்
காதல் கடவுள் சமூகம் இயந்திரம்
மனிதமாய்...


thangampandi@ymail.com