நூல் : காந்தள் நாட்கள்
நூல்
ஆசிரியர் :
 கவிஞர் இன்குலாப்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா .இரவி

'பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்' என்ற விளம்பர வாசகம் போல 'கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும்  கவிதையின் தரம் விளங்கும்' .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் .இவரது கவிதைகளை சிந்தைனையாளன இதழில் படித்து இருக்கிறேன் .மொத்தமாக நூலகப் பார்த்ததில் மகிழ்ச்சி சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். .பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார்நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் அவர்கள் சிவகங்கையின் சிறப்புமிகு  கவிஞர்  மீரா வழி  வந்தவர் என்பதால் அவரது நூலை கவிஞர்  மீரா அவர்களின் குடும்பத்தின்  அன்னம் வெளியீடாக நூல் வருவது சிறப்பு .தலைமுறை கடந்தும் தொடரும் நட்பு என்பதற்கு எடுத்துக்காட்டு .

நூல் முழுவதும் கவிதை விருந்து இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .

ஆசிரியன் 
ஆசாரியனாய்
நுழைகிறான் 
கையில்
பிரம்புடன் 
மனசில்
பூனூலுடன்  

மனிதர்களில் பலர் மனசாட்சியை அடகு வைத்து விட்டுத்தான் வசந்தம் அடிகிறார்கள் .என்ற நடப்பியலை சாடி புத்திப் புகட்டும் விதமான கவிதை நன்று .

"மனச்சாட்சியை உறங்க விட்டுருந்தால் 
வசப்பட்டிருக்கும்
வசந்தம்."

வெள்ளையனிடமிருந்து விடுதலைப் பெற்றோம் .ஆனால் வறுமை   ஏழ்மையிலிருந்து  விடுதலைப் பெறவில்லை  .பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் .ஏழை மேலும் ஏழை ஆகிறான் .இந்த அவலம் உணர்த்தும் நல்ல கவிதை ஒன்று .

ஆகஸ்டு 15 முன்னிட்டு எழுதிய கவிதை !

கண்ணீர் கோடு !
ஒரு
பக்கம் மட்டுமே  
கிளைத்துப்
 பூத்துக்  காய்த்துக் கனிகிற 
அறுபதாண்டு
மரம் இது .

கன்றாய் நட்ட இதனது பாத்தியில் 
குடம்
குடமாய் ஊற்றினோம்
எங்கள்
வியர்வையை !

அடியுரமாய் 
எரிக்கப்பட்ட
எங்கள் சாம்பல்
!   

மனிதநேயத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உரக்கப் பதிவு செய்துள்ளார் கவிதைகளில் திண்ணியம் கொடூர நிகழ்வை கண் முன் கொண்டு வந்து மனிதே நேயம் கற்பிக்கிறார்  .

ஐயா நீதிமானே 
எங்களுக்கு
எங்களைத் தவிர 
யாருமில்ல
 
சாட்சி
சொல்ல 
செருப்பால்
அடிச்சதையும் 

காய்ச்சுன  இரும்புக் கோலால் 
ஒவ்வொருத்தன்
    காலில் உழுந்து 
மன்னாப்புக்
கேட்டதையும் 
தண்டம்
கட்டியதையும்  
எல்லாத்துக்கும்
   மேலே 
பீ
தின்ன வச்சதையும் !

இரண்டு வரிக் கவிதையின் மூலம் இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

பன்னீரில் இல்லை 
ரோஜாவின்
அழகு !

அவர்  நினைத்து எழுதிய பொருள் தவிர  படிக்கும் வாசகனுக்கு பல  பொருள் தோன்றும் .

சித்தர்களின் பாடல்கள் போல ஜென் தத்துவம் போல வாசகனை சிந்திக்க  வைக்கும் விதமாக பல கவிதைகள்  உள்ளன .

ஞானி  ; " முடிவில் ஒன்றுமில்லை ."

பாமரன் ;  " தொடக்கதிலிருந்தே  ஒன்றுமில்லை ."

மீன்களை  விட  பறவைகளை  விட மனிதன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

நீந்தத்  தெரிந்தது நீந்துகிறது !
பறக்கத்
 தெரிந்தது பறக்கிறது !
படகிலோ
 
வண்டியிலோ
 
குந்தாமல்
!

மறைந்தும் மறையாமல் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வாழும் மாமனிதர் பற்றிய கவிதை ஒன்று மிக நன்று .

தோழர் ஆண்டன் பாலசிங்கம்  இரண்டாம் ஆண்டு நினைவாக !

விடுதலை உச்சரித்த சொல் 
பேசிய
குரல் 
ஒரு
மரணத்தோடு முடிவடைவதில்லை !
அது
 
காற்றின்
துணுக்குகளில் தவழ்கிறது .
உயரும்
விடுதலைக் கொடியின் 
படபடப்பில்
எழும் முதலோசை  
தோழர்
ஆண்டன் பாலசிங்கம் 
உம்குரலாக
 இருக்கும் .!

தொழிலாளர்கள்  பாடுவதுப் போன்ற கவிதைகள் உள்ளன .மொத்தத்தில் வாசகனுக்கு சிந்தனை விதைக்கும் கவிதைத் தொகுப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப்அவர்களுக்கு பாராட்டுக்கள்.  

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை
ரூபாய் 100.