முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு  பேராசிரிய ரத்னா விருது

நாமக்கல் கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆசிரியர் தின விழா 30.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்களுக்கு பேராசிரிய ரத்னா விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணைச் செயலர் திருமதி சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச்செயலர் திருமதி.நித்யா ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் எச். பாலகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் பேரா.எஸ். பெர்னார்டு எட்வர்டு ஆகியோர் பாராட்டி, வாழ்த்திய போது எடுத்த படம்.

படம்:
திருமதி சந்தியா ராமச்சந்திரன், திருமதி.நித்யா ராமச்சந்திரன், முனைவர் எச். பாலகிருஷ்ணன், பேரா.எஸ். பெர்னார்டு எட்வர்டு மற்றும் விருதாளர் முனைவர் பூ.மு. அன்புசிவா ஆகியோர் உள்ளனர். நாள்: 04.10.2018.