இரவி.இரா:

பெயர்: இரா.இரவி
தொடர்புகளுக்கு:
முகவரி:

48.வடக்கு மாசி வீதி
மதுரை .625001
இந்தியா.
தொலைபேசி:
919842193103
E.mail: eraeravik@gmail.com

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • கவிதைச் சாரல் - 1997
  • ஹைக்கூ கவிதைகள் - 1998
  • விழிகளில் ஹைக்கூ - 2003
  • உள்ளத்தில் ஹைக்கூ - 2004
  • நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
  • என்னவள் - 2005
  • இதயத்தில் ஹைக்கூ - 2007
  • கவிதை அல்ல விதை – 2007
  • மனதில் ஹைக்கூ   - 2010
  • ஹைக்கூ ஆற்றுப்படை - 2010
  • சுட்டும் விழி  - 2011

  • ஆயிரம் ஹைக்கூ - 2013
  • புத்தகம் போற்றுதும்  - 2014

  • கவியமுதம்  - 2014

  • ஹைக்கூ முதற்றே உலகு  - 2015

  • வெளிச்ச விதைகள் - 2016


     

சிறப்புக்கள்:
 

  • 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.
     

  • சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
     

  • புதுவை எழுத்தாளர் சங்கம் ஹைக்கூ கவிதை நூல் சிறந்த நூலாக தேர்வு செய்து பரிசும் பாராட்டுச் சான்றிதழும் புதுவை ஆளுனர் முன்னிலையில் ஆளுனர் மாளிகையில் புதுவை துணைவேந்தர் வழங்கினார்.
     

  • லண்டன் தமிழ் இலக்கிய மன்றம் உலக அள்வில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார்.
     

  • இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டி - இருதடவைகள் பரிசு பெற்றார்.
     

  • மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடமிருந்து வளரும் கலைஞர் விருது பெற்றுள்ளார் .
     

  • கணித்தமிழ் சங்கம் மதுரையில் நடாத்திய கணிப்பொறித் திருவிழாவில் ' தமிழும் அறிவியலும் ' என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.

  • டில்லி ' மக்கள் காப்புரிமை ' மாத இதழ் நடாத்திய கட்டுரை போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.
     

  • மனிதநேய் அறக்கட்டளையின் சார்பில் மனித 'நேயப்படைப்பாளர் ' விருது பெற்றுள்ளார்.
     

  • கவியருவி, கவிச்சிங்கம், கவிச்சூரியன், ஹைக்கூ திலகம் எனப் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.
     

  • நகர் முரசு வார இதழின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது பெற்றுள்ளார்.
     

  • 27.9.2014ல் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து சென்னையில் நடத்திய மாபெரும் விழாவில் எழுத்தோலை விருது சிலம்பொலி செல்லப்பன் அவர்களால் கவிஞர் இரா. இரவிக்கு வழங்கப்பட்டது.
     

இவரைப்பற்றி:

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலராக மதுரையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார்.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலில் இவரது 9 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன . விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி பாட நூலில் இவரது 2 ஹைக்கூ இடம் பெற்றுள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலில் 2014 ஆண்டில் இரண்டாம் முறையாக இரண்டு ஹைக்கூ இடம் பெற்றுள்ளன.