நிழற்படம் இல்லை
சுப்ரமணியம்.க.நா:

பெயர்: க.நா.சுப்ரமணியம்
பிறந்த இடம்: வலங்கைமான், தஞ்சை மாவட்டம்
(1912)

 

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்

படைப்புகள்:

நாவல்கள்:

  • சர்மாவின் உயில்
  • பசி
  • வாழ்வும் தாழ்வும்
  • சக்தி விலாசம்
  • ஏழுபேர்
  • ஒருநாள்
  • புழுதித்தேர்
  • மால்தேடி
  • நடுத்தெரு
  • கோபுரவாசல்
  • பொய்த்தேவு
  • அசுரகணம்
  • பித்தப்பூ

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மணிக்கூண்டு
  • ஆடரங்கு
  • கருகாத மொட்டு

விமர்சன நூல்கள்:

  • விமர்சனக் கலை
  • படித்திருக்கிறீர்களா?
  • உலகத்துச் சிறந்த நாவல்கள்
  • இலக்கிய விசாரம்

மொழிபெயர்ப்புகள்:

  • அன்புவழி - ஸ்வீடிஸ் நாவல்
  • தபால்காரன் - பிரெஞ்சு நாவல்
  • மதகுரு - ஸ்வீடிஸ் நாவல்
  • நிலவளம் - நார்வேஜியன் நாவல்
  • மிருகங்கள் பண்ணை – ஆங்கில நாவல்

விருதுகள்:

  • தினமணி பத்திரிகையில் வெளிவந்த கோதை சிரித்தாள் என்ற நாவல் - தமிழக அரசின் விருது
  • 1986 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது
  • 1979 - இவரது கவிதைகளுக்கு – மலையாள இலக்கியப் பரிசான குமாரன் ஆசான் நினைவு விருது
  • புதுவைப் பல்கலைக்கழகம் இவரை சிறப்புப் பேராசிரியராக நியமித்து கௌரவித்தது.

இவர் பற்றி:

  • தயவு தாட்சண்யம் இல்லாத கண்டிப்பான விமர்சனத்துக்கு பெயர்போனவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி. சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர். இவரது முதல் நாவல் பசி. மறைந்த எழுத்தாளர் (16.12.1988). பல மொழி இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றவர்.