முனைவர் நிர்மலாமோகன்:

பெயர்: நிர்மலா மோகன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
முனைவர் நிர்மலா மோகன்,
78/1, ஆழ்வார் நகர்,
நாகமலை புதுக்கோட்டை, மதுரை –
625019
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி:
0452 – 2458405
கைபேசி:
94436 75931
மின்னஞ்சல்:
nirmalamohan05@yahoo.co.in

படைப்புக்களில் சில:
  • இலக்கியத் தென்றல்
  • இலக்கிய மணிகள்
  • இலக்கிய நெறி

விருதுகள்:

  • சிறந்த பேச்சாளர் விருது
  • தமிழ்ப் பணிச் செம்மல் விருது
  • தமிழ்ச்சுடர் விருது
  • ஒளவை விருது
  • கிருபானந்தவாரியார் விருது
  • அமுதசுரபி, கல்கி, குமுதம், மங்கையர் மலர் போன்ற பல பத்திரிகைகள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் மொழியியலில் நிறைசான்றிதழ் பெற்றவர். மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் இணைப்பேராசிரியர். இதுவரை 12 நூல்கள், 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, எட்டாம் உலகத் தமிழ் மாநாடு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு போன்ற அனைத்துலக, அமைத்திந்திய, தேசியக் கருத்தரங்குகளில் பங்குகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா (2002), அமெரிக்காவில் (2002) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல சொற்பொழிவாற்றியுள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், இலக்கிய உரைகள் நிகழ்த்தியுள்ளார். பொதிகைத் தொலைக்காட்சி உள்ளிட்ட தனியார் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் நூற்றுக்கணக்கான உரைகள் ஆற்றியுள்ளார். கலைக்களஞ்சியங்களுக்காக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி (புதுதில்லி), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (சென்னை), திருமலை திருப்பதி தேவஸ்தானம் (ஆழ்வார் பிரபந்தத் திட்டம்) ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.