முனைவர் சந்திரா.ச: (04.01.1963):

பெயர்: ச.சந்திரா
புனைபெயர்: நிறைமதி
தொடர்புகளுக்கு:
முகவரி: முனைவர்.ச.சந்திரா
எண்-
39, கலைமகள் இல்லம்,
ஆராய்ச்சிப்பட்டி சௌண்டியம்மன் கோவில் தெரு,
வில்லிப்புத்தூர் -
626125,
விருதுநகர் மாவட்டம்.
மின்னஞ்சல்:
neraimathi@rocketmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, விமர்சனம்


படைப்பு:

  • சுற்றுச் சூழல் - கட்டுரைத் தொகுப்பு

விருதுகள்:

  • கல்லூரி விரிவுரையாளர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி - இருமுறை பரிசு பெற்றுள்ளார்.
  • இலக்கிய ஞாயிறு – சிறப்பு விருது – தமிழய்யா கல்விக்கழகம், திருவையாறு
  • கவிதாயினி – பாராட்டுப் பத்திரம் - கலை இலக்கியப் பெருமன்றம், வில்லிப்புத்தூர்.
  • கைத்தறிக்கு கை கொடுப்போம் - ஊக்க விருது – விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்.கோபல் அவர்கள் கரங்களால் பெற்றது.
  • தினமலர் நாளிதழ் நடத்திய மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு வாசகப் போட்டியில் மண்டல அளவில் சிறப்புப் பரிசு.
  • இலண்டனில் நிகழ்ந்த 11 ஆவது சை மாநாட்டு மலரில் வெளிவந்த கட்டுரைக்கு பணமுடிப்பு பரிசு

இவர் பற்றி:

  • இவர் பல்கலைக்கழக அளவில் இளநிலைப் பட்டப் படிப்பில் முதல்தரம் (தங்கப்பதக்கம்) பெற்றவர். டாக்டர் மு.வரதராசனார் நினைவுப்பரிசை உயர்தரக் கல்விக்காக பெற்றவர். அஃறிணை ஆயுதம் (பாட்டிலக்கிய நூல்), முப்பரிமாணங்கள் (இலக்கண நூல்) ஆகிய நூல்களை விரைவில் வெளியிடவுள்ளார். பல எழுத்தாளர்களது படைப்புக்களுக்கு விமர்சனங்கள், மதிப்புரைகள் வழங்கியுள்ளார். பட்டிமன்றங்களிலும், கவியரங்குகளிலும், விழிப்புணர்வுக் கருத்தரங்குகளிலும் பங்குபற்றுவார். பல இணையங்களிலும் நூல் மற்றும் மலர் விமர்சனங்கள் எழுதிவருகிறார்.