ராமகிருஷ்ணன்.எஸ்:

பெயர்: எஸ்.ராமகிருஷ்ணன
பிறந்த இடம்: மல்லாங்கிணறு கிராமம், விருதுநகர் மாவட்டம் (1966)
வசிப்பிடம்: சென்னை

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வெளியில் ஒருவன்
  • காட்டின்  உருவம்
  • தாவரங்களின் உரையாடல்
  • வெயிலைக் கொண்டுவாருங்கள்
  • பால்ய நதி
  • நடந்து செல்லும் நீரூற்று
  • எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்
  • வெளியில் ஒருவன்

நாவல்கள்:

  • உப பாண்டவம்
  • நெடுங்குருதி
  • உறுபசி
  • யாமம்
  • நடந்து செல்லும் நீரூற்று
  • துயில் - 2011

குழந்தைகள் இலக்கியம்

  • கிறுகிறு வானம்
  • ஆலீஸின் அற்புத உலகம்
  • கால்முளைத்த கதைகள்
  • ஏழு தலை நகரம்
     

கட்டுரைத் தொகுப்புகள்:

  • ஜோர்ஜ் லூயி போர்ஹே
  • வாக்கியங்களின் சாலை
  • துணையெழுத்து
  • விழித்திருப்பவனின் இரவு
  • பதேர் பாஞ்சாலி
  • நிதர்சனத்தின் பதிவுகள்
  • கேள்விக்குறி
  • ஆதலினால்
  • இலைகளை வியக்கும் மரம்
  • கதாவிலாசம்
  • தேசாந்திரி
  • கோடுகள் இல்லாத வரைபடம்

சினிமாக்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்புகள்:

  • அயல்சினிமா
  • பதேர்பாஞ்சாலி
  • சித்திரங்களின் விசித்திரங்கள்
  • உலக சினிமா
  • நிதர்சனத்தின் பதிவுகள்

நாடகத் தொகுப்பு:

  • அரவான்

மொழிபெயர்ப்புகள்:

  • ஆலிஸின் அற்புத உலகம் - லூயி கரோலின் எழுதியது
  • நம்பிக்கையின் பரிமாணங்கள் - ருஸ்தம் பரூச்சா எழுதியது

தொகுப்பு நூல்கள்:

  • உலக சினிமா
  • கால் முளைத்த கதைகள்

பணியாற்றிய திரைப்படங்கள்:

  • சண்டைக்கோழி
  • ஆல்பம்
  • பாபா
  • தாம்தூம்
  • பீமா
  • உன்னாலே உன்னாலே
  • கர்ண மோட்சம்
  • மோதி விளையாடு
  • சிக்கு புக்கு
  • அவன் இவன்
  • யுவன் யுவதி

நேர்காணல் தொகுப்பு:

  • எப்போதுமிருக்கும் கதை

விருதுகள்:

  • தமிழக அரசின் விருது - 2007
  • கனேடிய தமிழ்சங்க விருது - 2008
  • ஞானவாணி விருது - 2004
  • முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது - 2001
  • சிகேகே இலக்கிய விருது - 2008
  • தாகூர் இலக்கிய விருது - 2010 (இவ்விருதினைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் இவரே ஆவார்)

இவர் பற்றி:

  • இவர் அட்சரம் என்ற இலக்கிய இதழை நடத்தி வருகிறார் முழுநேர எழுத்தாளரான இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். தமிழ் மொழியின் மிக முக்கியமான நவீன எழுத்தாளர். எண்ணற்ற சிறுகதைகளும் மறக்கமுடியாத சில நாவல்களும் இவர் தமிழுக்கு அளித்திருக்கிறார். திரைப்படங்களுக்கும் வசனகர்த்தாவாகப் பணிபுரிபவர். பல தமிழ் பத்திரிக்கைகளின் மிகுந்த வாசக கவனம் பெற்ற பத்தி எழுத்தாளர் இவர். சினிமாவுக்கு திரைக்கதையும் உரையாடல்களும் எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள், நாடகங்கள், புத்தக அறிமுக கட்டுரைகள், சினிமா அறிமுக கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.