செல்லப்பா.சி.சு:

பிறந்த இடம்: சின்னமனூர், வத்தலக்குண்டு (1912 - 18.12.1998)
 

 

படைப்பாற்றல்: சிறுகதை, குறுநாவல், கவிதை, கட்டுரை, நாடகம்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • வாடிவாசல்
  • சுதந்திர தாகம் - பாகம் - 1, 2, 3
  • ஜீவனாம்சம்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • நீ இன்று இருந்தால் (காந்தியைப் பற்றிய நூல்)
  • பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி

நாடகம்:

  • முறைப்பெண்

விருதுகள்:

  • சுதந்திர தாகம் - சாகித்திய அகாடமி விருது

இவர்பற்றி:

  • ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். 'எழுத்து' என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பலவித இன்னல்களுக்கிடையே 1970ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த 'எழுத்து' காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும்,  எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன்,  பிரமீள்,  ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் 'வாடிவாசல்',  'சுதந்திர தாகம்' போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். அவர் எழுதிய 'சரசாவின் பொம்மை' சி.சு.செல்லப்பாவுக்குச் சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
    'சுதந்திரச் சங்கு' இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு 'மணிக்கொடி' இதழ் கை கொடுத்தது. அவர் எழுதிய 'சரசாவின் பொம்மை' சி.சு.செல்லப்பாவுக்குச் சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.
    1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பணியாற்றினார். சென்னை அக்னி அட்சர விருது, சிந்து அறக்கட்டளை விருது, இலக்கியச் சிந்தனையின் ஆதி லட்சுமணன் நினைவுப் பரிசு,  தஞ்சைப் பல்கலைக்கழகத் தமிழன்னை விருது, கோவை ஞானியின் அன்பளிப்பு,  உதவிகள், நன்கொடை முதலிய எதையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.