சாமிநாதையர்.உ.வே:

பெயர்: சாமிநாதன்
பிறந்தஇடம்: உத்தமதானபுரம், தஞ்சாவூர், தமிழ்நாடு
(1855 - 1942)

 

படைப்புக்கள்:
  • சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்
  • புதியதும் பழையதும்
  • நல்லுரைக் கோவை
  • என் சரிதம் (1950)

அச்சேற்றிய நூல்கள்:

  • சீவக சந்தாமணி
  • மணிமேகலை
  • சிலப்பதிகாரம்
  • புறநானூறு
  • திருமுருகாற்றுப்படை
  • பத்துப்பாட்டு
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்டை
  • பெரும்பாணாற்றுப்படை
  • முல்லைப் பாட்டு
  • மதுரைக்காஞ்சி
  • நெடுநல்வாடை
  • குறிஞ்சிப் பாட்டு
  • பட்டினப் பாலை
  • மலைபடுகடாம்

விருதுகள்:

  • மகாமகோபாத்தியாய – மத்திய அரசு – 1906
  • தாஷpணத்ய கலாநிதி – காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் - 1925
  • டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக்கழகம் - 1932
  • தமிழக அரசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவருக்கு சிலை நிறுவி பெருமையளித்தது.

இவரைப்பற்றி:

  • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா என்றும் அழைக்கப்பட்டவர். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்து மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார். கும்பகோணத்தில் பணியில் இருந்த காலத்திலே இராமசாமி முதலியார் என்பவரை சந்தித்து நட்பு கொண்டார். இவரே உ.வே.சாவின் ஏட்டுசுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சேற்றும் பணியே மேற்கொள்ள கால்கோலியவராவார். இவரால் உ.வே.சா விற்கு கையளிக்கபட்ட சீவக சந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமை அக்காலகட்டத்தில் சமயகாழ்ப்பினால் புறக்கணிக்பட்டிருந்த சமண இலக்கியங்களை பற்றி அறிவும் ஆவலையும், அதனை அழியவிடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அவருள் தூண்டியது. பலவிதமான சமண இலக்கியங்களை தேடி சேகரித்தார். 1887இல் சீவக சிந்தாமணியை பதிப்பித்து வெளியிட்டார். உ.வே.சாவின் தமிழ் இலக்கியங்களின் மூலப்பிரதிகளை தேடி அச்சிலேற்றும் பணி அவர் 84 வயதில் காலமாகும் வரை தொடர்ந்தது. இதற்காக அவர் பல ஊர்களில் ஏட்டுச் சுவடிகளை தேடியலைந்தார். முடிவில் கிடைத்தவற்றினை அச்சேற்றினார். செய்யுள், புராணங்கள், பக்தி, காப்பியம் என பல்வேறு வகைப்பட்ட ஒலைச்சுவடியாக இருந்த 90 ற்கு மேற்பட்ட இலக்கியங்கள் இவரால் வடிவானது. இந்திய அரசு பெப்ரவரி 18, 2006 ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.