காவலூர் ராசதுரை:

பிறப்பிடம்: ஊர்காவற்றுறை, யாழ்;ப்பாணம்.
வசிப்பிடம்: சிட்னி, அவுஸ்திரேலியா

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுதிகள்:

  • குழந்தை ஒரு தெய்வம் - 1961
  • ஒரு வகை உறவு – 1976
  • A Prophet Unhonoured  – ஆங்கிலச் சிறுகதைகள்

நாவல்:

  • வீடு யாருக்கு? - 1972

கட்டுரைத் தொகுப்பு:

  • விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்

இவர் பற்றி:

  • இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். கலைக்கோலம் என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை வானொலியில் மிகச் சிறப்பாக வழங்கியவர். தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற இவரது சிறுகதை இலங்கை தமிழ் கல்விப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சிறுகதை, இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் இவர். இவரது படைப்புக்கள் நாடகங்களாக மேடையேறின. காலங்கள், வீடு யாருக்கு என்பன அந்தவகையில் குறிப்பிடத்தக்கன. திரைப்படத்துறையிலும் இவர் பங்காற்றினார். பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை,வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.