கோவிலூர் செல்வராசன்:

பெயர்: இராசையா செல்வராசன்
புனைபெயர்: கோவிலூர் செல்வராசன்
பிறந்த இடம்: திருக்கோவில், மட்டக்களப்பு
(18.9.1952)

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, மெல்லிசைப் பாடல்கள்

படைப்புக்கள்:

  • விடியாத இரவுகள் - சிறுகதைத் தொகுப்பு – 1997
  • புதுக் கோலங்கள் - கவிதை தொகுப்பு – 1998

ஒலியிழை நாடாக்கள்:

  • உகந்தை முருகன் பக்திப் பாடல்கள் - 1986
  • திருக்கோவில் முருகன் பக்திப் பாடல்கள் - 1992
  • பிள்ளையார் அம்மன் பாடல்கள் - 2001
  • தேசத்தின் தென்றல் இசைத்தட்டு – 1999

விருதுகள்:

  • புலம்பெயர்ந்தோருக்கான தந்தை செல்வா விருது
  • மெல்லிசைக் கவிஞன் என்னும் பட்டம் - ஜேர்மனி தமிழ் மன்றம் - 1999
  • விடியாத இரவுகள் - லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, பணமுடிப்பும் - 1999

இவர் பற்றி:

  • இவர் இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு, இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை – 1975, லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1978, இளமைக் கோவில் ஒன்று – 1977 ஆகிய நாடகங்களை எழுதினார். சிந்தாமணி, வீரகேசரி, லண்டன் - மேகம், நோர்வே – பறை, பாரிஸ் - ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.