ரூபராணி ஜோசப்

பிறந்த இடம்:  மட்டக்களப்பு (05.09.1935)

 

படைப்பாற்றல்: சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல்ஈ கட்டுரை

படைப்புகள்:

  • ஏணியும் தோணியும் - சிறுவர் இலக்கியம்
  • அம்மாவின் ஆலோசனைகள் - சிறுவர் இலக்கியம்
  • இல்லை,  இல்லை – நாடகத் தொகுதி
  • ஒரு வித்தியாசமான விளம்பரம் - சிறுகதைத் தொகுதி
  • ஒரு தாயின் மடியில் - குறுநாவல்
  • நான் கண்ட துறவி – சிறு கைநூல்
  • கதைகள் அல்ல நிஜங்கள்

விருதுகள்:

  • மலையக கலையகப் பேரவை – சிறந்த இலக்கிய விருது
  • மத்திய மாகாண அரசின் சிறந்த கலைஞருக்கான விருது
  • சிறந்த கட்டுரைக்கான தேசிய விருது
  • சமய, சமூக அமைப்பின் சிறந்த கட்டுரைக்கான விருது
  • மட்டக்களப்பு கல்லூரி – சிறந்த நடிகைக்கான விருது
  • தமிழர் சிங்கள இணைப்பு – ரத்ன தீப விருது
  • தேசிய சாகித்திய பரிசு – ஏணியும் தோணியும்
  • மத்திய மாகாண சாகித்தியப் பரிசு – ஒரு தாயின் மடியில்
  • மத்திய மாகாண சாகித்தியப் பரிசு –  ஒரு வித்தியாசமான விளம்பரம்
  • வட கிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு - இல்லை இல்லை
  • நோர்வேயில் உலக ரீதியான சிறுகதைப்  போட்டி – முதற்பரிசு
  • கத்தோலிக்க தேசிய சங்கச் சிறுகதைப் போட்டி – பரிசு
  • இதுதவிர சொல்லின் செல்வி, கலையரசி, கலாரூபி, கலாஜோதி, நடிப்பரசி போன்ற பல பட்டங்களையும் பெற்றவர் இவர்.

இவர் பற்றி:

  • மலையக மக்களுக்காக கலை, இலக்கிய, சமூகப் பணிகளை ஆற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களைப் படைத்தும், நடித்தும், நெறிப்படுத்தியும் உள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி, இலக்கிய, அரசியல் சார்ந்த மேடைப்பேச்சுக்களை ஆற்றியவர்.
    23.04.2009 இல் காலமானார்.