வழக்குரை
மன்றம்
லறீனா அப்துல் ஹக், இலங்கை

'கோவலன்
கொலையுண்டான்'
செய்தி
வந்ததும்
காற்று
மௌனித்து
அஞ்சலி
செலுத்தியது.
* * *
* * * *
இரவுக்கு
வெள்ளையடிக்க
நிலவு
பொழிந்தாலும் -தேச
இருட்டுக்கு
அஞ்சி
காரைபெயர்ந்த
குடிலுக்குள்-அவள்
கந்தல்
சாக்கிலே
சுருண்டிருந்தாள்.
கண்முன்
கணவனின்
சடலமிருந்தும்
அடையாளம்
காட்டி
அழமுடியாது
உணர்வுகளைப்
புதைத்திட்ட
நேற்றைய
அவலத்தில்
நொறுங்கியிருந்தாள்.
* * *
* * * *
கண்ணகி
தேவிக்கு
கண்கள்
சிவந்தன
கூந்தல்
அவிழ்ந்து
காற்றில்
அலைந்தது
முகத்தினில்
ரௌத்திரம்
தாண்டவம்
புரிந்தது.
* * *
* * * *
எட்டு
மணிக்குள்
ஊர்
அடங்கிற்று
நீண்டு
ஒலித்தது
நாய்களின்
ஓலம்!
ஒன்பது
மணிக்கு
கதவு
தட்டப்பட்டது
திறக்குமுன்பே - தாழ்
தெறித்து
விழுந்தது.
உதைத்த
உதையில்
கதவு
கழன்றது.
"திடீர்
சோதனை'
தமிழ்ப்
பெண்களின்
மீதே
ஐயம்"
என்றனர்.
வேதனை
விழுங்கி
வண்டியிலேறிட –
அங்கே
இன்னும்
இவள்
போல்
இளைய
புறாக்கள்!
* * *
* * * *
எரிதழல்
எழுந்து
இருவிழியாகிட
முகத்தினில்
செந்தீ
மேவி
விளங்கிட
வீண்பழி
பொறுக்காது
–
கண்ணகி
வீறு
கொண்டெழுந்தாள்!
* * *
* * * *
சேலைத்
தலைப்பினை
ஒருவன்
இழுத்தான்
கத்திய
வாயை
மற்றவன்
பொத்தினான்
கட்டிக்காத்த "எல்லாம்"
-
அந்த
ஓடும்
வண்டியில்
உருக்குலைந்தாயிற்று!
வதை
முகாம்களில்
விசாரணைப்
போர்வையில் -
உயரதிகாரிகள்
மீண்டும்
ஒருமுறை
மிருகமானார்கள்!
* * *
* * * *
கண்ணகி
கொங்கையைக்
கழற்றி
எறிந்தாள்
பற்றி
எரிந்தது
மாநகர்
மதுரை!
* * *
* * * *
வழக்குரை
மன்றில்
வனிதை...
விசாரணை,
குறுக்குக்
கேள்விகள்...
வார்த்தையால்
மறுபடி
வல்லுறவு
நடந்தது.
ஆனால்...
அன்று
போல்
எரிப்பதற்கென்ன
எஞ்சியிருக்கிறது,
ஏலவே
"எல்லாமே"
கருகிவிட்ட
ஒரு
நாட்டில்?
lareenahaq@gmail.com
|