திரேசா
நாவாந்துறை
டானியல்
ஜீவா
நள்ளிரவு
இரண்டு
மணியைக்
கடந்தும்
தூக்கம்
வராமல்
தூரத்தே
செல்ல
என்
கால
கநர்வில்
கடந்து
சென்ற
ஐந்தாண்களுக்கு
முன்
முற்றுப்பெற்று
விட்ட
அந்த
மனிதத்தின்
நினைவு
எனக்குள்
ஓடத்தொடங்கியது.வயதெல்லை
தாண்டி
வார்த்தைகள்
வலுவிழந்து
மானிடமே
ஒவ்வொரு
கணமும்
மரணித்துக்
கொண்டும்
மரணத்தினுடாக
வாழ்வைத்தேடுகின்ற
மைந்தர்களில்
திரேசாவின்
இழப்பு
ஆயிரத்தில்
ஒன்றாக
மறைந்து
போயிருக்கலாம்.
ஆனால்
என்
கண்முன்னே
கணப்பொழுதில்
சிதைந்து
போன
அவளது
உடல்
என்
இதயத்தில்
ஆழமாய்
பதிவாகிவிட்டது.
அவளது
மரணம்
நேற்று
நிகழ்ந்தது
போல
இன்னும்
என்னும
மனத்திரையிலிருந்து
விலகாது
ஒட்டுக்கொண்டிருக்கின்றது.
என்னில்
எழுந்து
பின்
மறைந்து
போகின்ற
நிகழ்வுகளைப்போல்
அல்லாது
என்
இதயமே
வெடித்திடும்
போல்
இருக்கின்றது.
என்
வாழ்வில்
முடிந்து
போன
சோகங்களில்
முற்றுப்பெறாத
கவிதை
வரிகளுக்கு
கருப்பொருளானள். . . .
திரேசாவின்
மரணம்
அந்த
மீனவகிராமத்தே
வியப்பில்
ஆழ்திய
நிகழ்வுதான்.
அன்று
எல்லோர்
முகங்களிலும்
சோகம்
கவிழ்ந்து
கிடந்தது
ஊர்
எங்கும்
வீசிய
உப்புக்காற்றுக்
கூட
இழப்பைத்
தாங்கிக்
கொள்ளும்
முடியாமல்
சோகத்தை
சுமந்த
படி
சென்றது.
மண்ணுக்குள்
நேர்ந்த
மாரடைப்பi
நிணைந்து
என்
செஞ்சே
தீப்
பிளம்பானது.
இருள்
விலகிடாப்
பூமியில்
இன்னுயிர்
ஈந்தும்
முடிவவுறாத
சோகங்களுமே
சொந்தமாயின.
அடிவானத்தைக்
கடல்
குடிக்க
உயிர்களை
இரும்பு
உண்ணும்.
வைகறையின்
சத்தம்
அதிகாலை
ஆறு
மணியை
நினைவு
படுத்திக்கொண்டிருக்கும்.
தொழிலாளர்களும்
காக்கை
தீவு
செல்கின்ற
மீன்
வியாபாரிகளும்
நாவந்துறை
மீன்
சந்தைக்கு
முன்பாக
கூடுவார்கள்.
நாவாந்துறை
சந்தை
நாவலர்
வீதியும்
காரைநகர்
வீதியும்
சந்திக்கும்
இடத்தில்
அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில்
உள்ள
மீன்
சந்தைகளில்
ஓலளவு
வசதியாக
உள்ள
சந்தைகளில்
நாவந்துறை
மீன்
சந்தையும்
ஒன்று.
இறைச்சி
வகைகளும்
மரக்கறி
வகைகளும்
உட்பட
விற்பனை
செய்யப்படுகின்றன.
இச்
சந்தையில்
இருந்து
காக்கை
தீவுச்
சந்தை
ஒன்ரரை
மைல்
தொலைவில்
உள்ளது.
விடியற்காலை
ஏழு
மணியில்
இருந்து
பதினொரு
மணி
வரை
கூடி
பின்னர்
கலையும்.
நாவாந்துறைச்
சந்தை
பன்னிரண்டு
மணிக்குத்
தொடங்கி
பிற்பகல்
வரை
நீடிக்கும்.
இரண்டு
மீன்
சந்தைகளிலும்
வியாபாரம்
செய்பவர்களில்
திரேசாவு;
ஒருத்தி
சந்தைக்கு
முன்பாக
தேனீர்க்
கடையும்
இருக்கின்றன.
பின்பக்கமாக
அழகிய
கடற்கரை
இருக்கின்றது.
இந்தக்
கடலை
நம்பியே
இங்குள்ள
மீனவர்கள்
வாழ்கிறார்கள்.
கரையோர்தில்
மேவப்பட்ட
வெண்மணல்
புதிய
அழகை
கொடுத்துக்
கொண்டிருந்தது.
காலப்போக்கில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
குடிசைகள்
முளைக்கத்
தொடங்கின.
திரேசா
தேனீர்க்
கடை
வாசல்
படியில்
நின்ற
படி
''கடகத்தை
கொஞ்சம்
இறக்குமோன''
என்று
விடுவலை
வானைப்
பார்த்துக்
கொண்டிருந்த
ரவியிடம்
சொன்னாள்.
இறக்கிய
கையோடு
கபூர்
காக்காவிடம்
க10டான
தேனீர்
போடச்
சொன்னாள்.
கபூர்க்காக்காவின்
தேத்தண்ணிக்
கடையில்
வாடிக்கையாளர்களில்
திரேசாவும்
ஒருத்தி.
காலையில்
காக்கை
தீவு
மீன்
சந்தைக்கு
போவதற்கு
முதல்
கப|ர்க்காக்காவிடம்
ஒரு
பிளேன்
ரீ
சுடச்சுட
குடித்துப்
போட்டுத்தான்
கால்
நடையாக
காக்கை
தீவுக்கு
போவது
வழக்கம்.
தனக்காக
எதையும்
சேர்த்து
வைக்காது
பிள்ளைகளின்
வாழ்விற்காக
உழைத்து
ஓடப்
போனவள்
நீண்டு
நெடுத்த
உடல்கட்டும்
ஒன்று
இரண்டு
கறுப்பைத்தவிர
வெண்
நாரையின்
நிறம்
போல்
தலைமுடி
வெளுத்துப்போன
சீத்தச்
சட்டையும்,
பச்சை
நிற
நூல்
சேலையும்,
இடுப்பினில்
துணிப்பையும்,
அதன்
பக்கமாக
செபமாலையும்
இதுதான்
அவளது
வெளித்தோற்றம்.
அனால்
அவளது
மனசு
கடலைப்போல்
எல்லையற்று,
பரந்து
விரிந்து
கிடக்கின்றது.
மனித
நேயம்
மடியினில்
அடைகாத்து
வைப்பாள்
வாழ்வின்
ஒவ்வொரு
நெருக்கடியையும்
தன்
அறிவுக்கேற்ப்ப
வெற்றி
கொண்டு
வாழ்பவள்.
காலை
எழுந்ததும்
தேத்தண்ணீக்கடை,
காக்கை
தீவுச்
சந்தை
,
நாவாந்துறைச்
சந்தை
வீ
திரும்பியதும்
கோடிப்
பக்கமாக
கடகத்தையும்,
சுளகையும்
கழுவி
வைத்து
விட்டு,
சின்னத்தூக்கம்.
அழுந்ததும்
கிழவிகளோடு
ஊர்க்கதை
பின்னர்
ஓலைக்
குடிசையில்
ஒட்டுத்தூவாரத்தில்
உறைவிடம்
மீன்டும்
அடுத்த
நாள்
காலை
காக்கை
தீவை
நோக்கி
இப்படியோ
அவளது
பத்து
வருடமும்
ஓடியது.
இந்த
மீன்
வியாபாரத்திற்கு
வருவதற்கும்
அவளுக்குள்
ஒரு
சோகம்
ஒளிந்து
கடந்ததை
மறக்கமுடியாது.
ஒவ்வொரு
ஆவணி
பதினைஞ்சும்
இங்கு
பரலோகமாதா
திருவிழா
நடைபெறும்
ஒன்பது
நாள்
நோவினையும்
ஒரு
நாள்
பாடல்
பூசையுடன்
திருவிழாவை
சிறப்பிக்க
நாட்டுக்
கூத்தும்
நடைபெறும்.
இம்முறை
கலைக்கவி
நீ.
எஸ்தாக்கி
எழுதி
பெலிக்கான்
அண்ணாவியாரால்
நெறிப்படுத்தப்பட்ட
தென்மோடி
நாட்டுக்
கூத்தான
செபஸ்தியார்
நாட்டுக்
கூத்து
நடந்து
கொண்டிருந்தது.
கிறிஸ்த்தவ
மதத்திற்காக
தங்கள்
உயிரை
இன்னுயிர்
ஈந்தவர்களில்
செபஸ்தியாரும்
ஒருவர்.
இவரின்
வாழ்க்கை
வரலாற்றைக்
கொண்டதே
செபஸ்தியார்
நாட்டுக்கூத்து.
திரேசா
அவளது
கணவர்
அருளர்,
பிள்ளைகள்
எல்லோருக்கும்
நாட்டுக்கூத்தென்றாள்
உயிர்.
வறுத்த
சோளகம்
கொட்டையும்,
கச்சானும்
,
சுடுதண்ணிப்
போத்தலில்
தேத்தண்ணியோடும்
மேடைக்கு
முன்னால்
உட்காந்திருவார்கள்.கடசிசெபத்தியாரின்
கட்டத்தை
பார்த்துவிட்டுளூவலை
இலுக்கப்
போகலாம்
என்ற
முடிவெடுத்து
காத்திருந்தார்
அருளார்.
இரவு
மூன்று
மனியாகிவிட்டது.
பனி
உதிர்ந்து
கொண்டிருந்தது.நட்சத்திரங்கள்வான்வெளியில்
விரவிக்கிடந்தன
குளிர்நிலாவில்
திரேசாவின்
தலைஈரமாகியது.கூத்தும்
நடுப்பகுதியை
நெருங்கிக்கொண்டிருந்தது
வழமை
போல்
கடசிப்பகுதியில்
வரும்
செபத்தியார்
வேடத்தை
அண்ணவியார்
பெலிக்கான்
அவர்களே
ஏற்று
நடிக்கிறார்.கடசியில்
வரும்
யோகன்
இராசாவும்
வந்திட்டார்
இனிக்கடசி
செபத்தியார்
வரப்போகிறார்
என்ற
ஆவலோடு
அருளாரின்
கண்கள்
அகல
விரிந்தன.
திரேசாவின்
பார்வையும்தான்.
இயேசுவின்
மறுஉருவம்போல்
சித்திரவதை
செய்யப்பட்ட
உடல்காயயங்களோடு
சிகப்புநிறஆடை
உடலோடு
இறுக்கப்பட்டு
மேடையில்
தோன்றினார்
அண்ணாவியார்
பெலிக்கான்.காத்திருப்பின்
அர்த்தம்
உள்ளத்தில்
இன்பஉணர்வலையை
மீட்டிய
கணமே
தொழிலுக்கும்
போகவேண்டிய
கடமை
உணர்வும்
அவனுள்
எழுந்தது.தொழிலுக்கு
போகவில்லையென்றாள்
பிள்ளைகள்
பட்டினியாய்
கிடப்பார்கள்
என்றுமனதிற்குள்
நினைத்துக்கொண்டு
தொழிலுக்கு
ஆயுத்தமானன்.
திரேசா
நான்போயிற்று
வாறேன்
என்றார்
அருளார்.
நாட்டுக்கூத்தையே
கண்வெட்டாமல்
பார்த்துக்
கொண்டிந்த
திரேசா
ஒரு
கணம்
அருளாரை
திரும்பிப்பார்த்து
ஏனணன
இன்னும்
கொஞ்சம்
தானே
இருக்குது
தொழிக்கு
போகமல்
பார்க்கலாம்தானே
என்று
ஒரே
மூச்சில்
சொன்னாள்.
இங்கெரப்பா
இண்;டைக்கு
மங்களம்
பாடமாட்டாங்க.....
ஏனென்றாள்
அடுத்த
சனிக்கிழமை
நிலவு
வந்துவிடும்
தொழிக்கு
போகத்தேவையில்லை
விடிய
விடிய
பார்க்கலாம்
என்று
சொல்லிக்கொண்டே
புறப்பட்டார்
அருளர்.கடலில்
நீந்தியும்சுழியோடியும்
களம்கட்டிவளைத்தும்
புயலோடும்அலையோடும்
போரடச்சென்ற
அருளர்
இன்று
வரை
வீடுதிரும்பவில்லை.மண்டைதீவிலிருந்து
வீசிய
செல்லுக்கு
இரையாகி
கடலில்
தொலைந்து
போனான்.
அன்று
கூத்தும்
கும்மாளமுமாய்
ஊறிக்கிடந்த
மனிதர்களின்
முகத்தில்
இனம்
புரியாத
சோகம்
கவ்வியது.அருளர்
இறந்து
முப்பத்தொராம்
நாள்
முடிய
நார்க்கடகமும்
சுளகமும்
சுமக்கத்தொடங்கியவள்
இன்றுவவரை
சுமக்கிறாள்;
கடலில்
நீந்தியும்
சுழியோடியும்
களம்கட்டி
வளைத்தும்
புயலோடும்
அலையோடும்
போரடச்சென்ற
அருளர்
இன்று
வரை
வீடு
திரும்பவில்லை
மண்டைதீவிலிருந்து
வுpசிய
செல்லுக்கு
இரையாகி
கடலில்
தொலைந்து
போனான்.
அன்று
கூத்தும்
கும்மாளமுமாய்
ஊறிக்கிடந்த
மனிதர்களின்
முகங்களில்
இனம்
புரியாத
சோகம்
கவ்வியது.அருளர்
இறந்து
முப்பத்தோரம்
நாள்
முடிய
நார்க்கடகமும்
சுளகும்
சுமக்கத்
தொடங்கியவள்
தான்
இன்றுவரை
சுமக்கத்தொடங்கியவள்
இன்று
வரை
சுமக்கிறாள்
திரேசா
தேத்தண்ணீயை
ஒரு
முறடு
குடித்து
விட்டு
வானத்தை
அண்ணார்ந்து
பார்த்தாள்.அடிவானம்
சிவந்து
இரவு
நிலா
குறுகிக்
குறிகி
கடலுக்குள்
கரைந்து
கொண்டிருந்தது.
அப்போதுதான்
காக்கை
தீவு
போகாமல்
நிற்பதை
திரேசா
உணர்ந்தாள்.
வெள்ளாப்புக்
கொடுத்து
விடிவதற்குள்
காக்கைதீவு
போச்சேர்ந்து
விடவேண்டும்
என்ற
நோக்கில்
விறுவிறுப்பாக
நடக்கத்தொடங்கினாள்.
வழமையான
நடையைவிட
இன்று
வேகமாகத்தான்
நடக்கிறாள்.
சொந்த
வாக்கையிலும்
கூட
திரேசா
ஒரு
நாளோ
இருநாளோ
நடக்கவில்லை.
கிட்டத்தட்ட
ஆறு
வருடமாக
நடதே
பழக்கப்பட்டவள்.
மொத்தமாக
ஆறு
பிள்ளைகள்
ஐந்து
பெண்களும்,
ஒரு
பையனும்.
ஐந்து
பெண்களுக்கும்
தன்னால்
முடிந்ததைக்
கொடுத்து
சீரும்சிறப்புமாக
திருமணம்
செய்து
வைத்தாள்.
கடைசி
மகன்
தாசனை
பி.
ஏ
வரை
படிக்க
வைத்தாள்.
படித்து
முடிந்ததும்
கொழும்பில்
உத்தியோகத்தோடு
திருமணம்
செய்து
கொண்டான்.
ஊர்ப்பக்கமே
திரும்பிப்
பார்ப்பது
கிடையாது.
நன்றி
கெட்டவனாக
இன்னும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறான்.
அவன்
கூட
இவ்வளவு
வயது
வந்தும்
ஆச்சி
காக்கைதீவு
போய்
கஸ்ரப்பட
வேண்டுமா
என்று
ஒரு
கணம்
கூட
சிந்திப்பதில்லை.
தானும்
தன்
குடும்பமும்
என்று
கொழும்பில்
உல்லாச
வாழ்க்கை.
செபமாலை
சொல்லிக்
கொண்டு
வந்த
திரேசா
வசந்தபுரத்தைத்
தாண்டி
காக்கைதீவை
நெருங்கி
விட்டதை
உணர்ந்தாள்.
கடசிக்
காரணிக்கத்தை
விரைவாக
சொல்லி
முடித்தாள்.
நேற்றும்
ஓடா
நீராம்
மச்சச்
சாதி
ஒன்றையும்
காணல
எங்களுக்குத்தான்
சுனை
நீர்,
ஓடா
நீர்
வெள்ளிக்
கிழமை
நிலவு
என்று
தனக்குள்
முனுமுத்தபடி
நடந்தாள்.
வாடைக்காற்று
வந்தால்
சோர்ந்து
கிடக்கும்
மீனவர்கள்
விழிப்பார்கள்.
நல்ல
மீன்
சாதிகள்
பிடிபடும்.
களங்கண்ணியில்
வெள்ளை
இறால்
பாட்டு
இறால்
என்று
பிடிபடும்.
மீனவர்கள்
குடும்பம்
செல்வச்
செழிப்பில்
சிரித்து
விளையாடும்.
திரேசாவும்
அப்படித்தான்.
ஏனென்றாள்
அவர்களை
நம்பித்தான்
அவளது
வாழ்க்கை.
என்றும்
இல்லாதாவாறு
அறியப்படாத
அன்னியமுகங்களால்
காக்கைதீவு
மீன்
சந்தை
நிரம்பி
வழிந்தது.
கோட்டையில்
இருந்து
ஆமி
செல்லடிக்கிறாங்கள்
என்றதால்
யாழ்ப்பாணத்துச்
சந்தைகள்
இயங்காமல்
போய்விட்டது.
அதனால்
மீன்
வாங்குவதற்காக
புதிய
புதிய
முகங்கலெல்லாம்
சந்தையில்
கூடிவிட்டது.
வள்ளத்தில்
இருந்து
கூறி
விற்கும்
கூறியான்
அந்தோனியின்
குரல்
வானத்தைத்
தொடும்போல்
எதிரொலித்துக்
கொண்டிருந்தது.
மீன்
வாங்க
வந்தவர்கள்
அங்குமிங்குமாக
ஓடித்திரிந்தார்கள்
எங்கு
மலிவான
விலையில்
மீன்
விற்பார்கள்
என்பதற்காகவோ
தெரியவில்லை.
கரையைத்
தட்டிக்கொண்டிருந்த
வள்ளங்களில்
தொழிலாளர்கள்
மீன்
பொறுக்கிக்
கொண்டிருந்தார்கள்.
இறால்
வியாபாரி
முருகேசு
தராசு
படியோடு
ஓரமாக
நின்று
கொண்டிருந்தார்.
கனிபாவின்
பாயாச
அடுப்பைச்
சுற்றி
பக்கத்தில்
இருக்கும்
வடைக்கார
கிழவியை
முற்றுகையிட்டபடி
இளவட்டங்கள்.
திரேசா
அவசர
அவசரமாக
தான்
கொண்டு
வந்த
கடகத்தை
தலையில்
இருந்து
இறக்கினாள்.
கடகத்துக்குள்
இருந்த
பலகையை
எடுத்து
தனக்கு
வசதியாக
வைத்துவிட்டு
உற்காந்தாள்.
வள்ளத்தில்
இருந்து
வந்த
வாசு
மீனை
ஒரு
சுளகிலும்,
இறாலை
ஒரு
சுளகிலும்
போட்டான்.
அந்தக்
கணமே
தென்
திசையில்
இருந்து
இரைச்சலோடு
ஹெலி
வந்துகொண்டிருந்தது.
ஹெலிச்
சத்தத்தைக்
கேட்டு
ஒரு
சிலர்
ஹெலி
வருகுது
சுடப்போகிறார்கள்
என்று
சொல்லிக்
கொண்டு
சைக்கிளை
எடுத்துக்
கொண்டு
போனார்கள்.
தாழப்பறந்து
வந்த
ஹெலி
சுடத்தொடங்கியது.
வானத்திற்கும்
பூமிக்கும்
இடையில்
மனித
நாகரிகத்திற்கு
அப்பால்
ஓசை
எழுப்பிக்கொண்டிருந்தது.
எல்லோரும்
பாதுகாப்பான
இடத்திற்திற்கு
சிதறி
ஓடினார்கள்.
பின்னர்
இடியோடு
வந்த
புயல்
மழை
ஓய்ந்து
விட்டது.
ஹெலியின்
சத்தம்
குறைந்தது.
திரைப்படங்களில்
காணப்படும்
அழிவுகளின்
காட்சியாக
காக்கை
தீவு
சீரழிந்து
கிடந்தது.
மரங்களில்
ஹெலி
சுட்ட
காயங்களின்
தழும்புகள்
இந்துமா
சமுத்திரத்தையும்
தாண்டி
எங்கள்
அழுகுரல்
உலகம்
எங்கள்
பக்கம்
விழிக்கவில்லை.
மையான
அமைதி.
வயதான
திரேசா
எழும்பி
ஓடுவதகுள்
வேட்டுக்கள்
தீர்ந்து
விட்டது.
சிதறிப்போய்க்
கிடந்த
மீன்களுக்கிடையில்
திரேசா
இரத்த
வெள்ளத்தில
கிடந்தாள்.
என்
கட்டிலில்
அருகில்
இருந்த
மணிக்கூடு
எலாம்
அடிக்கத்
தொடங்கியது.
என்
நினைவுகளெல்லாம்
கலைந்தது.
நான்
இன்னும்
தூங்கவில்லையே?
நேற்றிரவு
கழுவித்
துடைத்த
சட்டிகள்
நினைவிற்கு
வந்தது.
ஓடு
ஓடு
வேலைக்கு
ஓடு
என்று
என்
மனம்
சொல்லியது.
(முற்றும்)

|