மணி.சி:

பெயர்:  எஸ்.பழனிச்சாமி
புனைபெயர்: வே, மாலி, சி.மணி, தாண்டவராயன்
பிறந்த இடம்: சேலம் (03.10.1936)

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • வரும் போகும் - 1974
  • ஒளிச் சேர்க்கை – 1976
  • சாதனா – 1975
  • சாரல் - 1976
  • இதுவரை - 1996

விமர்சன நூல்கள்:

  • யாப்பும் கவிதையும்

மொழிபெயர்ப்புகள்:

  • பௌத்தம்
  • தோண்டுகிணறும் அமைப்பும் – 1982
  • தாவோ தே ஜிங் - 2002

விருதுகள்:

  • விளக்கு விருது - 2002
  • வாழ்நாள் சாதனையாளருக்கான கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது
  • சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருது – 1983, 1985
  • கவிஞர் சிற்பி விருது
  • ஆசான் விருது

இவர் பற்றி:

  • சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' காலம்தொட்டு எழுதியிருக்கிறார். தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர். சந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி. யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில் கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்திஇ க.நா.சுப்ரமணியம்இசெல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல்.யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி. இத்தனைக்கும் மேற்கத்திய நவீன கவிதையின் பாதிப்பு அவரிடம் அதிகம். இவர் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. நடை என்ற பெயரில் சிறுபத்திரிகை ஒன்றையும் நடத்திவந்தார். 2009 இல் காலமானார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).